வெள்ளி, 2 ஜூன், 2017

நமக்கு உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்¨!

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்
என்று சொன்னால்,அது மீன் எண்ணெய் தான்,,,
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக
வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர,இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது.அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை. இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். 
இத்தகைய
மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.ஆனால் இதில்
இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும்,எண்ணெயை குடிக்க
முடியாது,அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய்
மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த
மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால்,இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும்
சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும்
கொலஸ்ட்ரால் இருந்தால்,அது இதயத்திற்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே இதை சாப்பிட்டால்,
இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த
ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை  குடித்தால் ,குண்டாவார்கள்
என்று தான் தெரியும்.ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள்,
 மூளையை நன்கு
சுறுசுறுப்போடு,எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும்.
மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும்.பெண்களின் இடுப்பு எலும்புகள்
நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால்,எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு,
மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக
பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்
போன்று இருக்கும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவற்கிரி நெற்

 
Blogger Templates