வியாழன், 8 ஜூன், 2017

யாழில் சுனாமி அச்சத்தை தொடர்ந்து வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ். வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான 
மழை பெய்துள்ளது.
சுனாமி தொடர்பில் வதந்தி பரப்ப்பட்டது. எனினும் இந்த மாற்றம் சுனாமிக்கான அறிகுறி என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (Shelf clouds) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

மர்மகுழு கொழும்பை அதிர வைத்துள்ளது ! மக்கள் அவதானம்

கொழும்பில் வாகனங்களில் கொள்ளையடிக்கும் மாணவ குழுவொன்றை மிரிஹான விசேட குற்ற விசாரணை அதிகாரிகள் கைது 
செய்துள்ளனர்.
வாடகை வண்டி சேவை சாரதிகளுக்கு கத்தியை காட்டி அச்சுறுத்தி அவர்களிடம் இருக்கும் தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசி மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில்
 ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மூன்று மாணவர்கள் இவ்வாறு குழுவாக செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்கள் கொள்ளையடித்த பொருட்களின் பெறுமதி சுமார் 6 லட்சத்திற்கும் அதிகம் என குற்ற விசாரணை பிரிவு 
தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் பிலியந்தலை, கிருலப்பனையை சேர்ந்தவர்கள் என மிரிஹான விசேட பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு 
குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் பிலியந்தலை, கடுவெல, பொரலஸ்கமுவ, ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் வாடகை சேவை சாரதிகளை பயணத்திற்காக அழைத்து சென்று பாழடைந்த இடத்தில் கூர்மையான கத்தியை காட்டி அவர்களிடம் உள்ள கையடக்க தொலைபேசி, தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


ரயில் மோதுண்டு தெஹிவளையில் ஒருவர் பலி

தெஹிவளை முகாந்திரம் வீதிக்கு அருகில் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மருதானையில் இருந்து நேற்று 
மாலை மாத்தறை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இஷான நிரங்க பெரேரா என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


புதன், 7 ஜூன், 2017

மருத்துவர் தனது விந்தணுக்களை பெண்களுக்கு செலுத்தியது அம்பலம்!

ஹாலந்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு தன்னுடைய விந்தணுக்களை செலுத்தியதாக மருத்துவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
ஹாலந்தின் ராட்டர்டாம் பகுதி அருகே ஜான் கார்பாத் என்ற மருத்துவர் பிஜ்தார்ப் செயற்கை கருத்தரிப்பு மையத்தை
 நடத்தி வந்தார்.
இங்கு சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தன்னுடைய சொந்த விந்தணுக்களை செலுத்தியதாக ஜான் கார்பாத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு துறையின் முன்னோடி என தன்னை அழைத்துக் கொண்ட ஜான் கார்பாத், கொடையாளிகள் பற்றிய விபரங்களை போலியாக எழுதியதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் ஒருவர், தன்னுடைய குழந்தை பழுப்பு நிற கண்களை கொண்டவனாக இருக்கிறான் எனவும், மற்றொருவர் தன்னுடைய குழந்தை மருத்துவரை போன்றே இருப்பதாகவும் 
தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொடர் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு மையம் மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 89வது வயதில் ஜான் கார்பாத் காலமானதை தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை ராட்டார்டாம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவரது உடமைகளை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் நீதிமன்றத்தில் 
முறையிட்டன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜான் கார்பாத்தின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் ஏதும் இல்லை என மருத்துவரின் குடும்ப வழக்கறிஞர் நீதிமன்றத்தில் 
வாதாடினார்.
ஒருவேளை மருத்துவரின் டிஎன்ஏ-வுடன், குழந்தைகளின் டிஎன்ஏ ஒத்துப்போனால் 1980களில் பெரும்பாலும் பிறந்த இந்தக் குழந்தைகள் அந்த மருத்துவர் மீது வழக்கு தொடர முடியும்.
இதற்கிடையே ஜான் கார்பாத் உயிருடன் இருந்தவரையிலும் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்து
வந்தமை  குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


செவ்வாய், 6 ஜூன், 2017

நாட்டில் இயற்கையின் கோரம். டெங்கு நோய்த் தாக்கம் தீவிரம்

நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளார்களே நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான  முதல் 6 மாத  காலப்பகுதியில் 56 ஆயிரத்து 887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து  212 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றமே காரணம் என 
தெரிவிக்கப்படுகின்றது. 
டெங்கு நோய் தாக்கம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டில் 12 ஆயிரத்து 610 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர். 
கடந்த மே மாதத்தில் 2 ஆயிரத்து 994 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பில் கடந்த மே மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42.55  வீதத்தினால் அதிகரித்துள்ளதை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்களில் அறியக்கூடியதாக உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


திங்கள், 5 ஜூன், 2017

நாட்டில் முட்டையின் விலையில் ஏற்பட்டதிடீர் மாற்றம்

நாட்டில் சில வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை தற்போது 8 ரூபாவாக விற்கப்படுகின்றது.

இதனால் தங்களுக்கு 15,000 தொடக்கம் 20,000 ரூபா வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 11 ரூபாவாக இருக்கின்ற போது, அதன் விற்பனை விலை 8 ரூபாவாக இருப்பதால் தங்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள்
 கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


வெள்ளி, 2 ஜூன், 2017

வெண்டைக்காயினால் இவ்வளவு நோய்கள் குணமாகுமாம் ?

இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.
மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும்.
எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா?
அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெண்டைக்காயின் சத்துக்கள்
வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.
வெண்டைக்காய் தண்ணீர்
சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும்
ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
சர்க்கரை நோயை விரட்டும்
சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த
சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.
மருத்துவ ஆய்வு
வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது.
வறுத்த வெண்டைக்காய் விதை
துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில்,
இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.
கொலஸ்ட்ரால்
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும்.
சிறுநீரக நோய்கள்
சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும்.ஆஸ்துமா
முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



நவற்கிரி நெற்

 
Blogger Templates