புதன், 5 ஜூலை, 2017

தூக்கம் என்பது தானாக வருவது சிறப்பாகும் அதுவே சயனம!

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளின் அன்றாட வாழ்வில் அவசியமானது… ஆனந்த சயனம்… ஆனாலும் பலருக்கு இது கிட்டாமலே உலைப்பது கண்கூடு.. குழந்தைக் காலத்தோடே கலைந்து பேனது.. ஆனந்த சயனம்.. பாயில் வீழ்தாலும் கண்களை
 இறுக மூடினாலும் தூக்கம் என்பது தானாக வருவது சிறப்பாகும்… அதுவே ஆனந்த சயனமாகும்.. நாளை என்ற பெரு
 நினைப்பில் கனவில் மனிதன் தூக்கம் தொலைக்கின்றான்.. ஆசைகள் அவசர தேவைகள் பிள்ளைகள் என்பதோடு அடுத்தவனோடு மறைமுக ஒப்பீட்டு போர் இவற்றால் இழக்கின்றான்
 ஆனந்த சயனம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 4 ஜூலை, 2017

செட்டிக்குளப்பிரதேசத்தில் தொடரும்மரணம் 45 நாட்களுக்குள் நால்வர்?

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் சிறுநீரக நோய் தாக்கம் காரணமாக கடந்த 45 நாட்களுக்குள் நான்கு பேர் மரணமடைந்துள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது கிராமத்தை விட்டு வெளியேறுவதா என கேள்வி 
எழுப்பியுள்ளனர்.
யுத்தம் காரணமாக கிளிநொச்சி உள்ளிட்ட வட பகுதிகளில் இருந்து 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களை வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் ஆகிய நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக 
தங்க வைத்தனர்.
அம்மக்களை மீள்குடியேற்றுவதற்காக தட்டான்குளம் பகுதி தெரிவு செய்யப்பட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்டிருந்தனர்.
135 குடும்பங்கள் இங்கு குடியேறி வாழ்ந்து வரும் நிலையில் சிறுநீரக நோயால் நூறுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 45 நாட்களுக்குள் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
இக்கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே இச்சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுவருகிறது. இது தொடர்பில் இப்பகுதி மக்கள் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரிடமுமம் முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதனால், தமது பிள்ளைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து செல்லலாம் என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 8 ஜூன், 2017

உடைந்து விழும் நிலையில்உள்ள கொழும்பில் மாடிக் கட்டடம்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து விழும் அபாய கட்டத்தில் உள்ளதாக பொலிஸார் 
எச்சரித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி 19 அவன்யூவில் அமைந்துள்ள மாடிக் கட்டடத்தில் பொலிஸ் அதிகாரிகள் தங்கியுள்ளனர்.இந்த நிலையிலேயே, அவர்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸ் தலைமையகம் 
அறிவித்துள்ளது.
குறித்த மாடிக் கட்டடம் இடிந்து விழும் ஆபத்தில் உள்ளமையினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தொகுதியில் 300க்கும் அதிக பொலிஸ் அதிகாரிகள் தங்கியிருப்பதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அருகில் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படுகின்றமையினால் அங்கு அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வெடிப்புகள் ஏற்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

யாழில் சுனாமி அச்சத்தை தொடர்ந்து வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

யாழ்ப்பாண வான்பரப்பில் திடீரென ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த மாற்றம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய அளவிலான கறுப்பு நிற முகில் ஒன்று நேற்று மாலை இவ்வாறு யாழ். வானில் தோன்றியுள்ளதாகவும், இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பருத்தித்துறையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து கடும் காற்றுடனான 
மழை பெய்துள்ளது.
சுனாமி தொடர்பில் வதந்தி பரப்ப்பட்டது. எனினும் இந்த மாற்றம் சுனாமிக்கான அறிகுறி என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் இது அச்சமடைய வேண்டிய விடயம் அல்ல எனவும் இதனை தட்டு மேகங்கள் (Shelf clouds) என அடையாளப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

மர்மகுழு கொழும்பை அதிர வைத்துள்ளது ! மக்கள் அவதானம்

கொழும்பில் வாகனங்களில் கொள்ளையடிக்கும் மாணவ குழுவொன்றை மிரிஹான விசேட குற்ற விசாரணை அதிகாரிகள் கைது 
செய்துள்ளனர்.
வாடகை வண்டி சேவை சாரதிகளுக்கு கத்தியை காட்டி அச்சுறுத்தி அவர்களிடம் இருக்கும் தங்க ஆபரணம், கையடக்க தொலைபேசி மற்றும் பணம் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில்
 ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பில் பிரபல பாடசாலைகளை சேர்ந்த மூன்று மாணவர்கள் இவ்வாறு குழுவாக செயற்பட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட 6 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகநபர்கள் கொள்ளையடித்த பொருட்களின் பெறுமதி சுமார் 6 லட்சத்திற்கும் அதிகம் என குற்ற விசாரணை பிரிவு 
தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17 மற்றும் 18 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் பிலியந்தலை, கிருலப்பனையை சேர்ந்தவர்கள் என மிரிஹான விசேட பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு 
குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் பிலியந்தலை, கடுவெல, பொரலஸ்கமுவ, ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் வாடகை சேவை சாரதிகளை பயணத்திற்காக அழைத்து சென்று பாழடைந்த இடத்தில் கூர்மையான கத்தியை காட்டி அவர்களிடம் உள்ள கையடக்க தொலைபேசி, தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


ரயில் மோதுண்டு தெஹிவளையில் ஒருவர் பலி

தெஹிவளை முகாந்திரம் வீதிக்கு அருகில் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மருதானையில் இருந்து நேற்று 
மாலை மாத்தறை நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான இஷான நிரங்க பெரேரா என்பவரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


புதன், 7 ஜூன், 2017

மருத்துவர் தனது விந்தணுக்களை பெண்களுக்கு செலுத்தியது அம்பலம்!

ஹாலந்தில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களுக்கு தன்னுடைய விந்தணுக்களை செலுத்தியதாக மருத்துவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
ஹாலந்தின் ராட்டர்டாம் பகுதி அருகே ஜான் கார்பாத் என்ற மருத்துவர் பிஜ்தார்ப் செயற்கை கருத்தரிப்பு மையத்தை
 நடத்தி வந்தார்.
இங்கு சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தன்னுடைய சொந்த விந்தணுக்களை செலுத்தியதாக ஜான் கார்பாத் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு துறையின் முன்னோடி என தன்னை அழைத்துக் கொண்ட ஜான் கார்பாத், கொடையாளிகள் பற்றிய விபரங்களை போலியாக எழுதியதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களில் ஒருவர், தன்னுடைய குழந்தை பழுப்பு நிற கண்களை கொண்டவனாக இருக்கிறான் எனவும், மற்றொருவர் தன்னுடைய குழந்தை மருத்துவரை போன்றே இருப்பதாகவும் 
தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தொடர் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டில் செயற்கை கருத்தரிப்பு மையம் மூடப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 89வது வயதில் ஜான் கார்பாத் காலமானதை தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு விசாரணை ராட்டார்டாம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவரது உடமைகளை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் நீதிமன்றத்தில் 
முறையிட்டன.
இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜான் கார்பாத்தின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் ஏதும் இல்லை என மருத்துவரின் குடும்ப வழக்கறிஞர் நீதிமன்றத்தில் 
வாதாடினார்.
ஒருவேளை மருத்துவரின் டிஎன்ஏ-வுடன், குழந்தைகளின் டிஎன்ஏ ஒத்துப்போனால் 1980களில் பெரும்பாலும் பிறந்த இந்தக் குழந்தைகள் அந்த மருத்துவர் மீது வழக்கு தொடர முடியும்.
இதற்கிடையே ஜான் கார்பாத் உயிருடன் இருந்தவரையிலும் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்து
வந்தமை  குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


செவ்வாய், 6 ஜூன், 2017

நாட்டில் இயற்கையின் கோரம். டெங்கு நோய்த் தாக்கம் தீவிரம்

நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் மொத்தமாக 55 ஆயிரத்து 150 டெங்கு நோயாளார்களே நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான  முதல் 6 மாத  காலப்பகுதியில் 56 ஆயிரத்து 887 டெங்கு நோயாளர்கள் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதத்தில் 12 ஆயிரத்து  212 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கு கடந்த மாதம் ஏற்பட்ட மோசமான காலநிலை மாற்றமே காரணம் என 
தெரிவிக்கப்படுகின்றது. 
டெங்கு நோய் தாக்கம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் இவ்வாண்டில் 12 ஆயிரத்து 610 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் 
காணப்பட்டுள்ளனர். 
கடந்த மே மாதத்தில் 2 ஆயிரத்து 994 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளர். ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில், கொழும்பில் கடந்த மே மாதத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42.55  வீதத்தினால் அதிகரித்துள்ளதை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல்களில் அறியக்கூடியதாக உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


திங்கள், 5 ஜூன், 2017

நாட்டில் முட்டையின் விலையில் ஏற்பட்டதிடீர் மாற்றம்

நாட்டில் சில வர்த்தக நிலையங்களில் முட்டையின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 15 ரூபாவாக இருந்த முட்டையின் விலை தற்போது 8 ரூபாவாக விற்கப்படுகின்றது.

இதனால் தங்களுக்கு 15,000 தொடக்கம் 20,000 ரூபா வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முட்டை ஒன்றின் உற்பத்தி விலை 11 ரூபாவாக இருக்கின்ற போது, அதன் விற்பனை விலை 8 ரூபாவாக இருப்பதால் தங்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக வர்த்தகர்கள்
 கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


வெள்ளி, 2 ஜூன், 2017

வெண்டைக்காயினால் இவ்வளவு நோய்கள் குணமாகுமாம் ?

இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.
மேலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதனால் வேறுசில உடல்நல பிரச்சனைகளும் தானாக வந்துவிடும்.
எனவே சர்க்கரை நோய் இருந்தால், அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை நோய்க்கு ஓர் அற்புதமான இயற்கை மருந்து ஒன்று உள்ளது என்பது தெரியுமா? மேலும் அம்மருந்து சர்க்கரை நோயுடன் வேறுபல பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி கொண்டது என்பது தெரியுமா?
அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வெண்டைக்காயின் சத்துக்கள்
வெண்டைக்காயில் பொட்டாசியம், வைட்டமின் பி, சி, ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை அதிகம் உள்ளது. மேலும் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.
வெண்டைக்காய் தண்ணீர்
சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் நீரில் 2 துண்டுகள் வெண்டைக்காயைப் போட்டு இரவு முழுவதும்
ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் காலை உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற் முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
சர்க்கரை நோயை விரட்டும்
சர்க்கரை நோய் வகைகளான டைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவற்றை சரிசெய்து, இரத்த
சர்க்கரை அளவை சீராகப் பராமரிப்பதற்கு வெண்டைக்காய் தண்ணீர் உதவுவதாக, பலர் அனுபவத்தில் கூறியுள்ளனர்.
மருத்துவ ஆய்வு
வெண்டைக்காய்க்கும், சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து மருத்துவ ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் நீரிழிவுடன் கர்ப்பமாக இருக்கும் எலிக்கு வெண்டைக்காய் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்த எலியின் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்தது தெரிய வந்தது.
வறுத்த வெண்டைக்காய் விதை
துருக்கியில் வறுத்த வெண்டைக்காயின் விதைகள் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்டதில்,
இம்முறையினால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்து சீராக பராமரிக்கப்பட்டு வந்தது நிரூபிக்கப்பட்டது.
கொலஸ்ட்ரால்
உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருந்தால், உணவில் வெண்டைக்காயை அதிகம் சேர்த்து வருவதோடு, வெண்டைக்காய் நீரை குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தி

நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவோராயின் உங்களது நோயெதிர்ப்பு சக்தியை வெண்டைக்காய் தண்ணீர் வலிமையாக்கும்.
சிறுநீரக நோய்கள்
சர்க்கரை நோயுடன், சிறுநீரக நோய்களின் தாக்கத்தில் இருந்தும் விடுபட நினைத்தால், வெண்டைக்காய் தண்ணீர் அதற்கு நல்ல உத்திரவாதம் அளிக்கும்.ஆஸ்துமா
முக்கியமாக சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கு, வெண்டைக்காய் தண்ணீர் மிகவும் நல்லது. இதனை பருகி வந்தால், ஆஸ்துமாவில் இருந்து நல்ல விடுதலை கிடைக்கும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



நமக்கு உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்¨!

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள்
என்று சொன்னால்,அது மீன் எண்ணெய் தான்,,,
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக
வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர,இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது.அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை. இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். 
இத்தகைய
மீனை சமைத்து சாப்பிடமாட்டோம்.ஆனால் இதில்
இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும்,எண்ணெயை குடிக்க
முடியாது,அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய்
மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த
மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால்,இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும்
சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும்
கொலஸ்ட்ரால் இருந்தால்,அது இதயத்திற்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தும்.ஆகவே இதை சாப்பிட்டால்,
இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த
ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை  குடித்தால் ,குண்டாவார்கள்
என்று தான் தெரியும்.ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள்,
 மூளையை நன்கு
சுறுசுறுப்போடு,எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும்.
மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும்.பெண்களின் இடுப்பு எலும்புகள்
நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால்,எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது. இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது. முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு,
மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக
பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப்
போன்று இருக்கும்
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


உங்கள் குழந்தைகளுக்கு தினமும் இதெல்லாம் கொடுங்க!

நாம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கொடுக்கும் சத்தான உணவுகள் தான், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது. எனவே அவர்களுக்கு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ள இயற்கையான உணவுப்

பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொடுக்க வேண்டும். பீட்ரூட் கீர் சிறிய பீட்ரூட் ஒன்றை சுத்தமாக்கி, தோல் அகற்றி, அதை ஜூஸ் செய்து வடிகட்டி

கொள்ள வேண்டும். இதனுடைய சுவையை அதிகமாக்குவதற்கு அரை மூடி தேங்காய்ப் பால், வெல்லம், ஏலம் மற்றும் முந்திரி ஆகியவற்றை பீட்ரூட் ஜூஸில் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

வாழைப்பூ சட்னி வாழைப்பூவில் நரம்பு நீக்கி சுத்தம் செய்து, அதனுடன் சிறிதளவு பொட்டுக்கடலை, தேவையான அளவு தேங்காய் துருவல், பச்சை மிளகாய், தோல் நிக்கிய இஞ்சி, உப்பு ஆகியவற்றை கலந்து அரத்துக் கொள்ள வேண்டும்.

இந்த வாழைப்பூ சட்னியை இட்லி, தோசைக்கு சட்னியாகவும், சாதத்திற்கு துவையலாகவும் பயன்படுத்தலாம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தவிருத்தி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை

குணப்படுத்துகிறது. புதினா ஜூஸ் புதினா தழைகளுடன், 100 கிராம் வெல்லம், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிய சாருடன்,

ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை கலக்க வேண்டும். இந்த புதினா ஜூஸை
தொடர்ந்தது குழந்தைகள் மற்றும் பெண்கள் குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனை, பசியின்மை மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றை இந்த புதினா ஜூஸ் குணப்படுத்துகிறது. பழசாலட்
கொய்யாப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம் போன்ற பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பன்னீர் திராட்சை மற்றும் மாதுளம் முத்துக்களை சேர்த்து குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால்,

குழந்தைகளின் ரத்தத்தை சுத்திகரித்து சீரான ரத்த ஓட்டத்தை அளிக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் நெல்லிக்காய் மற்றும் அதனுடன் இளநீர், 100 கிராம் வெல்லம் ஆகிவற்றைச் சேர்த்து

வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதிகரித்து, முடி நன்றாக வளரும் 
தன்மையை தருகிறது..
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


உங்கள் கொலஸ்ட்ராலை குறைக்கஒரு பொருள் போதும்?

தினமும் நாம்சமைக்க உதவும் பொருள்களே பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. இருந்த போதிலும், இன்றைய காலத்தில் அதனை நாம் தொட்டுகூட பார்ப்பதில்லை.
சிறிய வியாதியாக இருந்தாலும் மருத்துவமனைக்கு தான் செல்கிறோம்.
கெமிக்கல் மருந்துகளையே அதிகமாக எடுத்துக் கொள்கிறோம். இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை.
இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. ஆம் காலத்திற்கேற்ப புதிய புதிய நோய்கள் வருகின்றன.
இவற்றிற்கு எல்லாம் ஆங்கில மருத்துவத்தை நாடாமல் இயற்கை மருத்துவத்தை மக்கள் பின்தொடர்வது உடலுக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் தான் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.
இன்று உடல் பருமன் மிக அதிகமாக இருக்கும் நாடு என எடுத்துக் கொண்டால் இந்தியா தான் முதலில் உள்ளது.
இது மிகவும் அபாயகரமான செய்தி தான்.
இது போல, மன அழுத்ததினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதமும் அதிகமாக தான் உள்ளது.
மன அழுத்தம் ஒருவரின் மனம் சம்பந்தப்பட்டது என்றும் அது அந்த நபரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கும் என்பதும் நமக்கு நன்றாகவெ தெரியும்.
இந்த வகையில், அதிக கொழுப்பு மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்
எள் விதைகள் – 1 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
முதலில் ஒரு கிண்ணத்தில் எள் விதைகளை எடுத்துக் கொண்டு அதில் மேலே கூறிய அளவு தேன் ஊற்றி நன்றாக கலக்கி பசை போல வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு, இதனை ஒவ்வொரு நாள் காலை மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்மைகள்
இந்த கலவை உட் கொள்வதால், ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்புகள் கரையும்.
மேலும், இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. இதனால், மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம்
 கட்டுப்படுத்தப் படுகின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நிங்கள் அழகான மெல்லிய இடுப்பை பெறபயிச்சி முறை !

தரையில் மல்லாந்து படுத்து, கால்களை மடக்கி பாதங்களைத் தரையில் பதிக்க வேண்டும். கால்களை சற்று அகட்டி இருக்க வேண்டும். தொடைகள் ஒட்டக் கூடாது. முன்னங்கைகளை மடித்து,
 செங்குத்தாக உயர்த்த வேண்டும். கைவிரல்கள் மூடியபடி இருக்கட்டும். இப்போது, தலை மற்றும் கழுத்தை முன்பக்கமாக வளைத்து, வலது கையை நீட்டி, இடது கால் முட்டியைத் தொடுவதுபோல
 கொண்டுவர வேண்டும். பழைய நிலைக்குத் திரும்பி, இடது கையை இதேபோல கொண்டுவர வேண்டும். இது ஒரு செட். இதுபோல 15 முறைகள் செய்ய வேண்டும்.
பலன்கள்: இடுப்புப்பகுதி, வயிற்றுப்பகுதிக் கொழுப்புகள் குறையும். தசைகள் நன்கு இறுகும். கலோரி எரிக்கப்படும். ஒட்டுமொத்த உடலுக்கும் வலு கிடைக்கும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>


நாம் வெற்றிலை போடுவதால் ஏற்படும்சில நன்மை!

உணவு உண்டபின் பிறகு வெற்றிலை போடும் பழக்கம் உள்ளது. பொதுவான இந்த பழக்கத்தால் பல உடல் நற் பயன்கள் அடங்கியிருக்கிறது.

ஆனால் வெற்றிலையை சப்புவதால் உடல் எடையும் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை மிளகுடன் கலக்கும் போது, இந்த கலவை உடல் எடையை குறைக்கும் சிறந்த கருவியாக செயல்படும்.

வெற்றிலையினால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்!!! இந்த செயலை செய்து வந்தால், எண்ணி 8 வாரங்களில் நல்ல பலனை காண்பீர்கள். இப்போது அது எப்படி வேலை செய்கிறது என்பதையும், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் பார்க்கலாமா…?
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



ஊதா நிற கிழங்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்

ஊதா நிற உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையைக் அதிகரிக்கச் செய்யாது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்ப்பதற்குத் சிறியதாகத் தோன்றினாலும், இது இதய நோயின் ஆபத்துகளைக் குறைக்கிறது. ஊதா நிற உருளைக்கிழங்கு ஆக்ஸிஜன் உட்பொருட்களைக் கொண்டுள்ளது

இக் கிழங்கு கொரியாவில், எடையைக் குறைக்கும் பிரபலமான நாட்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

அதிக ரத்த அழுத்தத்துடன் அதிக எடையைக் கொண்ட 18 பேரிடம் ஒரு நாளைக்கு இரு முறை 6-8 சிறிய மைக்ரோவேவ் அளவுடைய ஊதா உருளைக்கிழங்குகள் கொடுத்து சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனை 4 வாரங்களுக்கு நடைபெற்றது.

சோதனை முடிவில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து காணப்பட்டதோடு உடல் எடையும் அதிகரிக்கவில்லை.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>

நீங்கள் சர்க்கரை நோயில் இருந்து விடுபட வேண்டுமா?

சர்க்கரை நோயைத் தடுக்கும் அத்திபழம் அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு
 உண்டு. சர்க்கரை
நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.
அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள
பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.
சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>



வெள்ளி, 31 மார்ச், 2017

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா,31,03.17

வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா. இன்று.14ம் நாள் பகல் 31.03.2017 வெள்ளிக்கிழமை
அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக
 ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் தேர் திருவிழா நடை பொற்றது பல கிராமங்களிலும் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர் பக்தர்கள் வெள்ளத்தில் 
தேரில் உலா வந்தார்கள்
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேர் திருவிழா நிகழ்வின்
நிழல் படங்கள் இணைப்பு 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




நவற்கிரி நெற்

 
Blogger Templates